சிவசக்தி சங்கமம், பெரு வெடிப்பு, உயிர்களின் தோற்றம்மற்றும் பிரிவுகள், அறிவு பற்றிய செய்திகளை முந்தைய பதிவுகளில் அறிந்தோம்.
அதன் தொடர்ச்சியாக சக்தி பீடம் உருவாகிய வரலாற்றை அறிவோம்.
பிரபஞ்சத்தைஉருவாக்க, பிரம்மாவிற்குசக்திதேவியின் உதவி தேவைப்பட்டது, எனவே சக்தி தேவி தனது கணவர் சிவபெருமானைவிட்டுபிரிந்து பிரம்மாவிற்கு உதவினார், பின்னர் மீண்டும் சிவபெருமானுடன்ஒன்றிணைவதற்காக, பிரம்மாவின்மகனான தக்ஷனின்மகள் – சதியாகஅவதரித்தாள்.
சதிதேவி பிறந்தது முதலே சிவபெருமானின் மீது ஆழ்ந்த அன்பு, காதல் பக்தி, என அனைத்திலும் சிவனை அன்றி வேறெந்த நினைவும் இல்லா வண்ணம் வளர்ந்து வந்தார்.
தக்ஷ பிரஜாபதி,பருவ வயதை அடைந்த தனது அழகிய மகள் சதிக்கு தகுந்த வரன் அமைய வேண்டும் என்ற பிரார்த்தனையில் இருக்க, ஓர் நாள் பிரஜாபதியின் தந்தையான பிரம்மதேவரும், நாரதரும் அவர்களது இல்லத்திற்கு வருகின்றனர்.
சதி தேவி அவர்களிடம் சென்று ஆசீர்வாதம் பெறுகிறார். தனது பேத்தியான சதி தேவியை ஆசீர்வதித்த பிரம்மதேவர், சதிக்கு ஒரு தகுந்த மணமகனை தான் பார்த்து வைத்ததாக உரைக்கிறார். மிகுந்த வியப்பில் யார் என்று வினவிய தக்ஷ பிரஜாபதிக்கு, அந்த வரன் சிவபெருமான் என்று அறியவும்,மிகுந்த நிராசையாக இருந்தது.
ஏனெனில், ஒரு சமயம் பிரம்மாவிற்கு ஐந்து தலைகள் இருந்த நேரத்தில் பிரம்மாவின் சில தகுதி குறைவான செயல்களுக்கு தண்டனையாக பிரம்மாவின் ஐந்தாவது தலையை சிவபெருமான் கொய்து விடுகிறார். அன்று முதல் பிரம்மா 4 தலைகள் கொண்ட நான்முகனாக மாறினார். அவரது நான்கு தலைகள் நான்கு வேதத்தை உணர்த்துவதாக கூறப்படுகிறது.
இந்த நிகழ்வை மனதில் வைத்திருக்கும் தக்ஷ பிரஜாபதி, தமது தந்தையை அவமதித்த ஒருவருக்கு தனது மகளை மணமுடித்துக் கொடுக்க மனமில்லாமல் தவித்தார். ஆயினும் தனது தந்தையின் வற்புறுத்தலை மீற முடியாமல், சதி தேவியை சிவபெருமானுக்கு மணமுடிக்க அரை மனதுடன் சம்மதிக்கிறார். தனது பாட்டனார்,தான் விரும்பிய நபரையே வரனாக கொண்டு வந்ததை அறிந்த சதி தேவி மிகுந்த ஆனந்தத்தில், கட்டாயம் அவரை அடைய வேண்டும் என்ற எண்ணத்தை வெளிப்படுத்துகிறார்.
பிரம்ம தேவரோ, “மகளே சதி, சிவபெருமானை அடைவது அவ்வளவு எளிது அல்ல, தூய மனதோடும் பக்தியோடும் கடும் விரதத்தை மேற்கொள்ள வேண்டும் என உரைக்கிறார்.
சதி தேவியும் மிகுந்த அன்போடும் காதலோடும் தனது மனத்திற்கு உகந்தவரை அடைய வேண்டி கடும் தவம் மேற்கொள்கிறார். பல காலங்களாக கடுமையான தவம் தொடர்கிறது. நாட்கள் நீளவே பிரம்மதேவரும், விஷ்ணு பகவானும் தமது மனைவியருடன் சதி தேவியை ஆசீர்வதிக்க வேண்டுமாய், சதி தேவி தவம் புரியும் இடத்தை நோக்கி விரைய, அவர்களுடன்பிறதேவர்களும் இணைந்து கொள்கின்றனர்.
அனைவரும் சதிதேவியை அடைந்த அந்த தருணம், அவரது மலர்ந்த தாய் முகத்தை கண்டு, அவரை ஆசீர்வதிப்பதற்கு பதிலாக அன்னையின் ஆசிர்வாதத்தை எதிர்பார்த்து அவர் தவத்திலிருந்து கண் விழிக்க காத்து நிற்கின்றனர்.
அதுவே அன்னை ஆதிபராசக்தியின் அருள். அவ்வாறு கண்களை விழித்து அனைவரையும் வாழ்த்தும் சதி தேவி அனைவரிடம் வாழ்த்துக்களையும் பெற்றுக் கொள்கிறார். அன்னையை வாழ்த்தி வணங்கி அங்கிருந்து அனைவரும் புறப்படுகின்றனர், உடனே கைலாயத்தை நோக்கி விரைகின்றனர்.
சிவபெருமானிடம் சதி தேவியின் காதலையும் கடும் பக்தியையும் அவரது நீண்ட தவத்தையும் பற்றி உரைக்க, சிவபெருமான் சதி தேவியை காண ஆவல் கொள்கிறார். சதி தேவியை நேரில் சந்திக்க அவரிடுக்கும் இடத்தை நோக்கி விரைகிறார்.
சிவபெருமான் சதி தேவியை கண்ட அந்த தருணம், ஒருவருக்கொருவர் வார்த்தைகள் இல்லாமல் மனதை கண்களால் பரிமாறிக்கொள்கின்றனர். நிசப்தமாக இருக்கிறது, வார்த்தைகள் இல்லை. சதியின் மௌணத்தை தாளாத சிவ பெருமான், “ தேவி ! தங்களது ஆழ்ந்த பக்தியில் கரைந்த என் உள்ளம் நீங்கள் கேட்கும் வரத்தை அளிக்க தயாராக உள்ளது என்று கூறினார்.
வரம் அளிக்க வேண்டி வந்திருக்கும் சிவபெருமானையே வரமாக கேட்க தயக்கம் கொண்ட சதி தேவி, சிவபெருமானையே பார்த்திருக்க, சிவபெருமான்,“சதி!தாங்கள் என்னை மணந்து கொள்கிறீர்களா?” என கேட்க இருவரும் காதலில் கரைகின்றனர்.
இவ்வாறாக நீண்ட கால பிரிவிற்கு பின்னர் ஐயனும் அன்னையும் இணையும் தருணம் உண்டானது. தேவர்கள் முன்னிலையில் சிவசக்தி திருமணம் நடைபெறுகிறது. சதிதேவி கைலாயத்தில் சிவபெருமானுடன் ஆனந்தமாக காலத்தை கடத்தி வருகிறார்.
இவ்வாறு இருக்க ஒரு முறை தக்ஷ பிரஜாபதியின் இல்லத்தில் நடக்கும் ஒரு விழாவிற்கு, கடவுள்கள், தேவர்கள் ரிஷிகள் உட்பட அனைவரும் அழைக்கப்படுகின்றனர். அனைவரும் கூடியிருக்கும் தருணத்தில் தக்ஷ பிரஜாபதி அரங்கத்திற்கு உள்ளே நுழைய, அனைவரும் எழுந்து தக்ஷ பிரஜாபதிக்கு மரியாதை செலுத்துகின்றனர். சிவபெருமான் மட்டும் தனது தனது ஆசனத்திலேயே அமர்ந்திருக்கிறார். இதனை அவமானமாக கருதிய தக்ஷ பிரஜாபதிக்கு, சிவபெருமானின் மீது இருந்த கோபம் இந்த செயலினால் மேலும் அதிகரிக்கிறது.
சிவபெருமான் அவரை விட உயர்ந்த நிலையில் இருக்கும் தான், அவருக்கு தலை வணங்கினால், அது தக்ஷ பிரஜாபதிக்கு உகந்தது அல்ல என்பதை உணர்ந்ததால் அமைதியாய் இருக்கிறார். இதனை உணராத பிரஜாபதி, சிவபெருமானை அவமதித்தே ஆக வேண்டும் என்ற எண்ணம் கொள்கிறார்.
மீண்டும் ஒரு பிரம்மாண்ட யாகத்திற்கு ஏற்பாடு செய்கிறார் பிரஜாபதி.தனது மகள் சதி தேவி மற்றும் சிவபெருமானை தவிர பிற அனைத்து கடவுள்களும் தேவர்களும் முனிவர்களும் ரிஷிகளும்யாகத்திற்கு அழைக்கபடுகின்றனர்.
யாகத்திற்கான அனைத்து ஆயத்தங்களும் செய்யப்படுகிறது. அனைவரும் எங்கேயோ பயணப்படுவதை அறிந்த சதி தேவி அவர்களிடம் காரணம் கேட்க, பிரஜாபதியின் யாகம் பற்றி தெரிய வருகிறது.தனது தந்தை தன்னை ஏன் அழைக்கவில்லை என்ற வியப்போடு, வேறு எதுவும் யூகிக்க முடியாமல் தனது கணவரான சிவபெருமானிடம் யாகத்திற்கு செல்ல வேண்டுமாய் அனுமதி கேட்கிறார்.
சிவபெருமானோ வேண்டாம் என மறுக்க, சதி தேவி கட்டாயம் செல்ல வேண்டும் என்கிறார்.வேறு வழியில்லாமல் சிவபெருமான் தங்களுக்கு செல்ல வேண்டும் என்று மனம் இருந்தால், நீங்கள் தாராளமாக செல்லலாம் என அனுமதி அளிக்க, சதி தேவி நந்தி தேவர் மற்றும் பிற சிவகணங்களுடன் தக்ஷ பிரஜாபதியின் அரண்மனையை நோக்கி பயணிக்கிறார்கள்.
சதி தேவி அரண்மனையை அடைகிறார். யாக சபை நிறைந்து இருக்கிறது. சதி தேவியை கண்ட பிரஜாபதி, அவரது வருகையை விரும்பாமல் அவரை தவிர்த்து விடுகிறார். இருந்தாலும் சதி தனது தாய் தந்தையரை வணங்கி அவர்களை அவர்களின் வாழ்த்துக்களை பெறிகிறார்.
தனது தந்தையிடம் தன்னையும் தனது கணவரையும் யாகத்திற்கு அழைக்காததற்கு காரணம் கேட்க, பிரஜாபதி சதிதேவியை அவமதிக்கிறார், மேலும் சிவபெருமானை பற்றி கடும் வார்த்தைகளைஉமிழ்கிறார். தனது கணவரை அவமான படுத்துவதை ஏற்று கொள்ள சதி தேவி தனது தந்தையின் மீது மிகுந்த கோபத்தில் தங்களுக்கு மகளாக பிறந்ததையே நான் பெரிதும் அவமானமாக கருதுகிறேன் எனக் கூறி, மானசிகமாக சிவபெருமானிடம், மீண்டும் அடுத்த பிறவியில், தங்களை மதிக்கும் ஒரு தந்தைக்கு மகளாக பிறந்து உங்களை அடைவேன் என்று கூறி அந்த யாக தீயிலேயே தனது உடலை மாய்த்துக் கொள்கிறார்.
நடந்ததை எதிர்பாராத முடியாமல் அனைவரும் செய்வதறியாது திகைக்கின்றனர். நந்தி தேவர் மற்றும் சிவகணங்கள் அவரை காக்க முயல பலனில்லாமல் போனது. கோபத்தில் பிரஜாபதியின் படைகளுடன் சண்டையிட அவர்களால் வெற்றி பெற முடியாமல் போனது.
சதி தேவியை இழந்த சோகத்தில் விரைந்து சிவபெருமானை அடைகின்றனர். நடந்ததை உணர்ந்த சிவபெருமானின் கோபத்தில், அவரது நெற்றிப்போட்டில் இருந்து வீரபத்திரன்உதிக்கிறார். சதி தேவியின் இழப்பையும் சிவகனங்கள் அவமதிக்க பட்டதற்கு தகுந்த தண்டனையை வழங்கும் படி சிவபெருமான் வீர பத்ரனை பணிக்க, வீரபத்திரன் யாக இடத்தில் அனைவரையும் துவம்சம் செய்கிறார். பிரஜாபதியின் தலையை கொய்து விடுகிறார்.
யாக இடத்தை அடைந்த சிதைந்த சிவபெருமான், சதி தேவியின் சிதைந்த உடலை கையில் எடுத்து அவரது ருத்ர தாண்டவத்தை துவங்குகிறார்.
உலகின் அனைத்து இயக்கங்களும் கட்டுக்கடங்காமல் போனது, இயற்கை அழிவை நோக்கி பயனித்தது, கடல் கொந்தலித்தது, பிரலயம் உருவாக தொடங்கியது.
பயந்து போன தேவர்கள், சிவபெருமானை தடுக்க விஷ்ணுவிடம் உதவிகேட்டனர். விஷ்ணு பகவான் சிவபெருமானை கட்டுப்படுத்த முயன்றார், ஆனால் அவரது முயற்சி வீணானது. மாற்று வழியின்றி தவித்த விஷ்னு தனது சுதர்சனசக்கரத்தால்சதியின்உடலை அழிக்கிறார். சதி தேவியின் உடல் 51 பாகங்களாக பூமியின்பல்வேறுபகுதிகளில்விழுந்தன.
சதியின் உடல் சிதற, சிவன் தன்னிலையை உணர துவங்கினார். அமைதியடையத்தொடங்குகிறார், தக்ஷரின் தலையை ஆட்டுத்தலையால் மாற்றி அவருக்கு உயிர்கொடுக்கிறார். சதியின் உடல்பாகங்கள் ஒவ்வொன்றும் பூமியில் விழுந்து பாறைகளாக மாறியது. அந்த இடங்கள் இப்போது சக்திபீடங்களாக உள்ளன. சிவன் அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பைரவரை துணையாக நியமித்துள்ளார்.
அவை பூமியின் பல்வேறு பகுதிகளில் விழுந்தன – இன்றைய இந்தியா, இலங்கை, நேபாளம், பங்களாதேஷ், பாகிஸ்தான் மற்றும் சீனாவில் சிதறிக்கிடக்கின்றன.
ஒவ்வொரு சக்திபீடமும் வெறும் கோயில்கள் மட்டுமல்ல, பூமியில் உள்ள மகாசக்தியின் உயிர்சக்திகுவிப்பு மையங்கள். ஒவ்வொரு சக்தி பீடத்திற்கும் தனித்தனி வரலாறும், தனி பெருமையும் உண்டு.