சிவசக்தி சங்கமம்
சிவ சக்தி சங்கமதத்தில் உருவான நெருப்பு அண்டமெங்கும் பரவி ஒரு புதிய உலகத்தை நிர்மானித்தது. இன்று கூறப்படும் “பிக் பாங் தியரி” என்பது இதை தான். நம் முன்னோர்கள் நாம் எளிதில் புரிந்து கொள்ள அளித்த கதை.
பெருவெடிப்பு
பெரு வெடிப்பால் சூரியன், சந்திரன், பூமி மற்றும் பிற கோள்கள் உருவாகின. நெருப்பு இறுகி நிலமாகவும், நிலத்திற்குள் நீரும் உருவாகின. ஆனால் உயிர் தோன்றல் நிகழவில்லை.
மும்மூர்த்திகளான பிரம்மா, சிவன், விஷ்னு, மற்றும் தேவர்கள் என அனைவரும் இணைந்து உயிர் தோன்றலை குறித்து ஆலோசித்தனர். உயிர் தோற்றத்திற்கான அனைத்து பணிகளும் துவங்கியது. உயிர் சுழற்சிக்கான பணிகளும் அவரவர்க்கு நிர்ணயிக்கப்பட்டது.
அவ்வாறே பிரம்ம பகவான் ஆக்கும் பணி, விஷ்னு பகவான் காக்கும் பணி மற்றும் சிவ பெருமான் அழிக்கும் பணி என்று நிர்மானித்தனர்.
பிரம்மா அண்டத்தை சிருஷ்டிக்க துவங்கினார். அவருக்கு சக்தி தேவிப்பட்டது, சிவபெருமானின் மனைவி அன்னை பராசக்தி இப்பணியில் பிரம்மாவிற்கு உதவுகிறார்.
உயிர் தோற்றம்
அண்ட சுழற்சியை வகுக்க, 84 இலட்சம் யோனி பேதங்களை, நால் வகை தோற்றத்தில் வகுத்து நிர்மானித்தார்,
அவை 1. அண்டசம், 2. சுவேதசம், 3. உற்பிசம், 4.0சராயுசம் ஆகியன.
அண்டசம்
முதலாவதான அண்டசம் என்பவை முட்டையிலிருந்து பிறப்பன,
பல்லி, ஓணான், அரணை மற்றும் சில நீர் மற்றும் நிலத்தில் வாழக்கூடிய
ஆமை, தவளை, நண்டு,பாம்பு, பக்ஷிகள் மற்றும் மீன் போன்றவை.
சுவேதசம்
இரண்டாவதான சுவேதசம் என்பவை வியர்வையில் பிறப்பன.
பேன், மூட்டை பூச்சி, பாக்டிரியாக்கள் எனும் நுண்ணுயிர்கள் மற்றும் சில காலான்கள் போன்ற மனிதர்கள், விலங்குகள், தாவரங்கள் மற்றும் பூமியில் உருவாகக்கூடிய வியர்வையால் தோன்றுவன.
உற்பிசம்
மூன்றாவதான உற்பிசம் என்பவை மண்ணிலிருந்து தோன்றும் தாவர செடி கோடிகள் ஆகியன.
சராயுசம்
இறிதியானவை சராயுசம் எனும் கருப்பையிலிருந்து பிறப்பன. மனிதகள் மற்றும் சில விலங்கினங்கள் ஆகியன.
இதையே விஷ்னு பகவானின் தசாவதாரமும் நமக்கு உணர்த்துகிறது.
நீரில் மட்டுமே உயிர் வாழும் மீன் – மச்ச அவதாரம்,
நீரிலும் நிலத்திலும் வாழக்கூடிய ஆமை – கூர்மாவதாரம்,
நிலத்தில் மட்டுமே வாழும் பன்றி – வராக அவதாரம்,
மனிதனும் மிருகமும் கலந்த கலவையாக நரசிம்மம் – ஆதி மனிதனின் தோன்றல், பின்னர் வாமநன் எனும் மனித அவதாரம்.
இதன் பின்னர் மனித பிறவிகள் மேம்பட வீரம், இரக்கம், பண்பு, கலாச்சாரம், ஜீவகாருண்யம் என்று பல்வேறு தத்துவங்களில் உதித்த பரசுராமர், ராமர், பலராமர், ஶ்ரீ கிருஷ்னர் மற்றும் கல்கி என பத்து அவதாரங்களின் மூலம் மனித பிறவியின் தார்ப்பர்யங்கள் நமக்கு இங்கே உணர்த்தப்பட்டுள்ளது.
இந்த நால் வகை தோற்றம் எழு வகை பிறப்புகளாக வகுக்கப்பட்டு படைக்கப்பட்டன.
ஏழு பிறப்புகள்
ஏழு பிறப்புகள்என்பவை அறிவு சார்ந்தவை
செடி, கொடி போன்ற தாவரங்கள் ஒரறிவு கொண்டவை.
நீரில் வாழும் உயிரினங்கள் ஈரறிவு கொண்டவை.
நிலத்தில் ஊர்ந்து செல்லும் பிராணிகள் மூவறிவு கொண்டவை.
வானில் பறக்கும் பறவையினங்கள் நான்கறிவு கொண்டவை.
வீட்டில் மற்றும் காட்டில் வாழும் பிற விலங்கினங்கள் ஐந்தறிவு கொண்டவை
மனிதர்களாகிய நாம் ஆறறிவு கொண்டவர்கள்.
மனித நிலையை விட மேம்பட்ட நிலையில் உள்ள ஞானிகள், சித்தர்கள் மற்றும் கடவுள்கள் ஆகியோர் ஏழறிவு கொண்டவர்கள்.
இதனையே,
“ புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல் அசுரராகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்றஇத்தாவர சங்கமத்துள்
எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்
மெய்யே உன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன்”
என சிவபுராண வரிகள் நமக்கு உணர்த்துகின்றன
அறிவு என்பது யாது
நாம் நம்மை சுற்றி உள்ளவற்றை எப்படியெல்லாம் உணர்கிறோமோ அதனையே அறிவு என்கிறோம். இதனை நமது தொல்காப்பிய வரிகள் மிக அழகாக உணர்த்துகின்றன.
“ஒன்று அறிவதுவே உற்று அறிவதுவே
இரண்டு அறிவதுவே அதனொடு நாவே
மூன்று அறிவதுவே அவற்றொடு மூக்கே
நான்கு அறிவதுவே அவற்றொடு கண்ணே
ஐந்து அறிவதுவே அவற்றொடு செவியே
ஆறு அறிவதுவே அவற்றொடு மனனே
நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத்தினரே”.
மெய், நாக்கு, மூக்கு, கண், செவி ஆகிய ஐந்தறிவுடன் மனம் சேர்ந்தால் ஆறறிவு, அதாவது தொடு உணர்வு, சுவை, நுகர்தல், கண்களால் காணுவது மற்றும் கேட்கும் திறன் இதனுடன் இணையும் மனம் சிந்தித்தல் ஆய்வு செய்தல் எனும் பணிகளை செய்து நாம் ஆறறிவு கொண்ட மனிதர்களாக வாழ்கிறோம்.
மனிதனுக்கு மட்டுமே ஏழாம் அறிவை பெற்று தேவ நிலையை அடையும் வாய்ப்பு ஏற்படுகிறது.
ஏழாம் அறிவு என்பது ஆறுடன் சேர்ந்து ஏழாவது என்பதல்ல, இவ்வாறையும் கடந்த ஏழாம் நிலை. மெய்யறிவு ஒன்று மட்டுமே, இவ்வுடல், மனம், பசி , காற்று, உடை, இருப்பிடம், ஆசை , இன்பம், துக்கம், தூக்கம் என எதுவுமின்றி அனைத்தும் கடந்து பஞ்ச பூதத்தில் கலக்கும் நிலை.
தேவர்கள் இந்நிலையை கொண்டவர்களே, ஆனால் மனிதர்கள் அந்நிலையை எய்த முடியுமா என்றால் கட்டாயம் முடியும்.
எடுத்துக்காட்டுகள் ஏராளம்,
பட்டினத்தார் லிங்க வடிவில் மறைந்தார், வள்ளலார் ஒளி வடிவாகி காற்றில் கரைந்தார், அரங்கனை எண்ணி கோதை எனும் ஆண்டாள் அனைவரது கண் முன்னரே அரங்கனாதர் கோவில் கருவறையில் காற்றோடு கலந்தார் என்பது வரலாறு, இவ்வாறு எண்ணற்ற வரலாறுகள் உள்ளன.
அவ்வளவு மகத்தானது மானுட பிறவி.
இதையே அவ்வை பாட்டியின் வரிகள் நமக்கு எடுத்துரைக்கின்றன.
“அரியது கேட்கின் வரிவடி வேலோய்
அரிதரிது மானிடர் ஆதல் அரிது !
மானிடர் ஆயினும் கூன்குருடு செவிடு
பேடு நீங்கிப் பிறத்தல் அரிது !
பேடு நீங்கிப் பிறந்த காலையும்
ஞானமும் கல்வியும் நயத்தல் அரிது !
ஞானமும் கல்வியும் நயந்த காலையும்
தானமும் தவமும் தான்செயல் அரிது !
தானமும் தவமும் தான்செய்வ ராயின்
வானவர் நாடு வழிதிறந் திடுமே !!!
மேலும் பிற பதிவுகளில் பயணிப்போம்.